செவ்வாய், 12 ஜனவரி, 2010

மயிலாடுதுறையில் இரத்ததானம்

வெண்மணி தியாகிகள் தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இரத்ததான கழகம் சார்பில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் 25 யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் நகரத் தலைவர் டி.கே.ஆர்.கதிரவன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் ஏ.பிரகாஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் சி.மேகநாதன், ஒன்றியத் தலைவர் எம்.இளைய ராஜா, ஒன்றியப் பொருளாளர் ஜி.வைரவன், துணைச் செயலாளர் எஸ்.ஜெயராஜ், துணைத் தலைவர் டி.அலெக்சாண்டர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சதீஸ், சி.ராஜா, எஸ்.ஆம்ஸ்ட்ராங் மற்றும் இளம்பெண்கள் மாவட்ட கன்வீனர் எம்.சிவரஞ்சனி, இரத்ததானக் கழக நிர்வாகிகள் பா.குமரவேல், ஏ.சரவணன், பொருளாளர் எம்.கார்த்தி, செயற்குழு உறுப்பினர் சி.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமா, நகர்மன்றத் துணைத்தலைவர் தம்பி சத்தியேந்திரன் ஆகியோர், இரத்ததானம் செய்த கொடையாளர்களுக்கு அரசின் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர். சங்கத்திற்கு கேடயமும் வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனை தலைமை அதிகாரி கே.சந்திரசேகரன், இரத்த வங்கி அதிகாரி ஆர்.மகேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இரத்த தான கழகத்தின் செயலாளர் ஏ.ஆர்.விஜய் நன்றி கூறினார்.