திங்கள், 15 பிப்ரவரி, 2010

வாச்சாத்தி வழக்கு பிப்.11-க்கு ஒத்திவைப்பு

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் வாச்சாத்தி கிராமத்தில் 1992-ம் ஆண்டு மலைவாழ் இனத்தை சேர்ந்த 18 பெண்கள் வனத்துறையை சேர்ந்தவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக வனத்துறை காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் 269 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 16 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் கடந்த ஜூன் மாதம் தருமபுரி அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இவ்வழக்கு நடந்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற குறுக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட 18 பெண்கள், பின்னர் சிறைவார்டன் லலிதா பாய் சாட்சியமளித்தனர்,

ஜனவரி 28 அன்று மாவட்ட நீதிபதி எஸ்.குமரகுரு முன்பு நடைபெற்ற குறுக்கு விசாரணையில் குற்றவாளி தரப்பில் டி.எப். ஓ. துரைசாமி சாட்சியமளித்தார். அரசுத் தரப்பு சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் ஜெயபால், எதிர்த்தரப்பு வழக்கறிஞர் விஜயராகவன், வாதாடினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் பிப்ரவரி 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். பிப்ரவரி 11 அன்று மத்திய புலனாய்வுத்துறை மாவட்ட துணைக்கண்காணிப்பாளர் ஜகநாதன் சாட்சியமளிக்க உள்ளார்.