வியாழன், 4 மார்ச், 2010

அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும்- பிப்.15-ல் மாநிலம் தழுவிய போராட்டம்

அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பிப்ரவரி 15-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்களை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அருந்ததிய அமைப்புகளின் தலைவர்கள் இப்போராட்டங்களை தலைமை ஏற்று நடத்துவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மின்வாரியத் தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமனங்களில் அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்தாத தைக் கண்டித்தும், அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் அருந்ததியருக்கான உள்ஒதுக்கீட்டை உறுதியாக அமல்படுத்தக் கோரியும், பல மாவட்டங்களில் அருந் ததியினர் பிரிவினருக்கு உரிய சாதிச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்தும், தமிழகத்தின் அனைத்து பின்னடைவு காலியிடங்களை உடனடியாக நிரப்பவும், பல்லாயிரக்கணக்கான காலியிடங் களை பூர்த்தி செய்ய வலியுறுத்தியும் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
அதில் பங்கேற்போர் விபரம்:
ஈரோடு  -    பி.சம்பத், எஸ்.எஸ்.சுப்பிரமணியன், பி.பி.பழனிச்சாமி, சக்தி கருப்பசாமி, கே.சென்னியப்பன்.
விருதுநகர்  - கே.பாலபாரதி, கே.சாமுவேல்ராஜ், பி.சுகந்தி, ஜக்கையன்
திருநெல்வேலி - என்.நன்மாறன், ஆர்.கிருஷ்ணன், மரியதாஸ்
திருச்சி  -  எஸ்.கே. மகேந்திரன், எம்.ஜெயசீலன், அண்ணாதுரை,
கோவை - ஜி.லதா, யு.கே.சிவஞானம், ரவிக்குமார், வி.பெருமாள், வெண்மணி
திருப்பூர் - சி.கோவிந்தசாமி, எஸ்.கண்ணன், ராமமூர்த்தி
நாமக்கல் - டில்லிபாபு, துரைசாமி
தருமபுரி - பி.சண்முகம், வெங்கடேசன், வேல்முருகன்
தேனி - ஏ.லாசர், வெங்கடேசன்.
தூத்துக்குடி - க.கனகராஜ், இசக்கிமுத்து
நீலகிரி - சதாசிவம், ஆர்.பத்ரி
சேலம் - கே.எஸ்.கனகராஜ், ஆர்.தர்மலிங்கம்.
ஈரோட்டில் மின்வாரியத் தலைமைப்பொறியாளர் அலுவலகம் முன் பாகவும், திருப்பூரில் மாந கராட்சி அலுவலகம் முன்பும், மற்ற இடங்களில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.