புதன், 24 மார்ச், 2010

தீண்டாமைச் சுவர் அகற்றம்: மார்க்சிஸ்ட் கட்சிக்கு திருமண அமைப்பாளர்கள் நன்றி

கோவையில், தீண்டாமைச் சுவரை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, அனைத்து இன திருமண அமைப்பாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு நன்றி தெரிவித்தது.
இதுகுறித்து அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்ததாவது:
கோவை வரதராஜபுரம் பெரியார் நகரில், 21 ஆண்டுகாலமாக இருந்த தீண்டாமைச் சுவரை அகற்ற துணை நின்ற மார்க்சிஸ்ட் கட்சிக்கும், தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கும் எங்கள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தீண் டாமைக்கு எதிரான பணிகள் தொடரவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.