புதன், 24 மார்ச், 2010

உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி எழுச்சி ஆர்ப்பாட்டம்

இடைநிலை ஆசிரியர், கல்லூரி ஆசிரியர், மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்காததை கண்டித்தும், அனைத்து அரசுத் துறைகளிலும் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீட்டை அமலாக்க வேண்டும்; பின்ன டைவு பணியிடங்களை நிரப்பவேண்டும்; அருந்ததியர்களுக்கு சாதிச் சான்றிதழை முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், 15.2.2010 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
விருதுநகர்
அதனொரு பகுதியாக விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமுஎகச மாவட்டத் தலைவர் தேனிவசந்தன் தலைமை வகித்தார். அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநில அமைப்பாளர் கு.ஜக்கையன் துவக்கவுரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி சிறப்புரை ஆற்றினார்.
அருந்ததியர் ஜனநாயக விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் கௌதமன், எம்.ஊர்க்காவலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச்செயலா ளர் ஜே.ஜெ.சீனிவாசன், மா.பாண்டியன், பெருமாள்சாமி, விஜயபாண்டி, முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். முத்துக்குமார் நன்றி கூறினார்.
திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமுஎகச-வின் மாவட்டக்குழு உறுப்பினர் மரியடேவிட் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.முத்துவேலு துவக்கவுரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எம்.திருமலை கண்டன உரையாற்றினார். விநாயகமூர்த்தி, ரேணுகாதேவி, முனியப்பன், பி.முருகேசன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
காரியாபட்டி
காரியாபட்டியில் சிவபாக்கியம், ஆறுமுகம் ஆகியோர், ஆர்ப்பாட்டத்திற்கு தலை மை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சேகர் பேசினார். தாலுகா செயலாளர் வி.முருகன் கண்டன உரையாற்றினர். இதில், தமிழ்ப்புலிகள் மாவட்டத்தலைவர் கே.தமிழரசிகனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கு.பாண்டியராசு, தமிழ்ப்புலிகள் சார்பில் பழனிமுருகன், வாலிபர் சங்கத் தின் நிர்வாகிகள் சுரேஷ், ரமேஷ், மாதர்சங்க செயலாளர் பஞ்சு ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருத்தங்கல்
திருத்தங்கல்லில் சிஐடியு கன்வீனர் எஸ்.மாடசாமி, ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ராமமூர்த்தி துவக்கவுரை ஆற்றினார். மாதர் சங்க மாவட்டத் தலைவர் சி.ஜோதிலட்சுமி கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.பாண்டி, வாலிபர் சங்கம் சார்பில் கே.ஆர். பாண்டி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆலங்குளம்
ஆலங்குளத்தில் முனியசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்து, கரிசல் இயக்குநர் முனியாண்டி பேசினார். தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ், ஒன்றியச் செயலாளர் எம்.சுந்தர பாண்டியன், அருந்ததியர் ஜனநாயக முன்னணியின் மாவட்டச் செயலாளர் பரமசிவம், எழுத்தாளர் பெருமாள்சாமி, சிஐடியு கன்வீனர் சேர்வை ஆகியோர் உட்பட பலர் பங் கேற்றனர்.
இராஜபாளையம்
இராஜபாளையத்தில் சிஐடியு கன்வீனர் சக்திவேல் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஜி.கணேசன் துவக்கவுரை ஆற்றினார். மாதர் சங்கம் சார்பில் கனகமுத்து, ஆர்.முருகன், பொன்ராஜ், சுப்பிரமணியன், அம்மாசி, பால்ராஜ், பொன்னுச்சாமி, அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் பெருமாளம்மாள் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். இராஜபாளையம் மேற்கு ஒன்றியத்தில் ஏ.கருப்பையா தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் டி.நீராத்திலிங்கம் துவக்கவுரை ஆற்றினார். வாலிபர் சங்க மாநில துணைத் தலைவர் என்.முத்துராஜ் நிறைவுரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ.ராமர், கந்தசாமி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பில் ஜீவானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துவக்கி வைத்து என்.ஏ.சிங்கராஜ் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் சி.ஜெயக்குமார், சின்னத்தம்பி, அமலன், கன்னியம்மாள் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
சாத்தூர்
சாத்தூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.சுப்பாராஜ் தலைமை தாங்கினார். மாதர் சங்க மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் கண்டன உரையாற்றினார். மாதர் சங்க வட்டச் செயலாளர் சரோஜா, அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன், சீனிவாசன், விஸ்வநாத் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையில் மாரி, சந்திரன், இளங்கோ ஆகியோர், ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தனர். ராஜாராம் துவக்கவுரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எம்.தாமஸ் கண்டன உரையாற்றினார். இதில் கணேசன், ளகாளிமுத்து, மகராசி, நாச்சியார் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
பந்தல்குடி
பந்தல்குடியில் எம்.ஞானப்பிரகாசம், ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ஆர்.அண்ணாத்துரை துவக்கவுரை ஆற்றினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் எஸ்.ஞானகுரு கண்டன உரையாற்றினார். மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பூங்கோதை, தமிழ்ப் புலிகள் ஒன்றியச் செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
எரிச்சநத்தம்
எரிச்சநத்தத்தில் விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் பி.நேரு, ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.முத்துக்குமார் துவக்கவுரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சேகர் கண்டன உரையாற்றினார். கோவிந்தராஜ், மாரியப்பன், தமிழ்ப்புலிகள் சார்பில் முத்தையா, ஆதித் தமிழர் பேரவையின் சார்பில் வேல்முருகன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்.ஆர்.நகர்
ஆர்.ஆர்.நகரில் கே.குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.சி.பாண்டியன் துவக்கி வைத்துப் பேசினார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.விஜயமுருகன் சிறப்புரை ஆற்றினார். இதில் பாலமுருகன், ஆரோக்கியராஜ் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
வன்னியம்பட்டி
வன்னியம்பட்டி விலக்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். துவக்கி வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.பால்கண்ணன் பேசினார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.குருசாமி கண்டன உரையாற்றினார். புரட்சிப் புலிகள் சார்பில் கோவிந்தன், சந்திரன், இருளப்பன், இசக்கி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
சிவகாசி
சிவகாசியில் எஸ்.மாடசாமி, ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தார். புரட்சி புலிகள் அமைப்பின் மாநில அமைப்பாளர் எஸ்.கே.பழனிச்சாமி துவக்கவுரை ஆற்றினார். நகரச் செயலாளர் பி.என்.தேவா கண்டன உரையாற்றினார். சிஐடியு சார்பில் ஜே.லாசர், வாலிபர் சங்க நகரத் தலைவர் கே.முருகன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
தேனி மாவட்டம்
தேனியில் ஸ்டேட் பேங்க் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் டி.வெங்கடேசன் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொறுப்பாளர் ஏ.லாசர் சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ராஜப்பன், அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்க மாவட்ட அமைப்பாளர் எம்.ராஜேந்திரன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் வி.வீரபாண்டியன், தமிழ்ப்புலிகள் மாவட்டச் செயலாளர் சி.ஆதிநாகராஜ், ஏஎச்ஆர்எப் ஒருங்கிணைப்பாளர் பி.முருகேசன், எஸ்.எம்.சுரேஷ்குமார், மாதர் சங்க தேனி மாவட்டச் செயலாளர் எம்.விஜயா, சி.மஞ்சுதா உட்பட நூற்றுக்கும் மேற்பட்ளடோர் பங்கேற்றனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
திருச்சி ஜங்ஷன் காதி கிராப்ட் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் மாநகரச் செயலாளர் கே.அண்ணாதுரை தலைமை வகித்தார். கிளைச் செயலாளர்கள் என்.நாகராஜ், சி.குமார், சி.சந்திரபிரகாஷ், எம்.வள்ளுவன், ஏ.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், ஆர்.சம்பத், அன்வர் உசேன், பகுதிச் செயலாளர்கள் வீரமுத்து, குமார், ஜெயபால், ராஜேந்திரன், கார்த்தி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வன், மாவட்டத்தலைவர் சசிகுமார், மாதர் சங்க நிர்வாகிகள் சித்ரா, ரேணுகா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம்
நெல்லை- பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். அருந்ததியர் மகாசபை தலைவர் மரியதாஸ் முன்னிலை வகித்தார். எஸ்.சி. எஸ்.டி., நலச்சங்க மாவட்டச் செயலாளர் பூ.கோபாலன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வீ.பழனி, சிஐடியு மாவட்டத் தலைவர் ம.ராஜாங்கம், மாவட்டச் செயலாளர் ஆர்.கருமலையான், எஸ்.சி., எஸ்.டி. மத்திய - மாநில அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலா ளர் அம்பேத்கர், மாவட்டத் தலைவர் ஹரிராம், மக்கள் கண்காணிப்பகம் மாவட்ட நிர்வாகி கணேசன் ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.நன்மாறன் எம்எல்ஏ நிறைவுரையாற்றினார்.