புதன், 24 மார்ச், 2010

சாதிவெறியர்கள் அராஜகம்: சிபிஎம் ஊழியர் மீது தாக்குதல்

ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது கொசவபட்டி. இப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக பி.செல்வராஜ் உள்ளார். இவர் தலித் ஆவார்.
காப்பிளியபட்டியில் தண்ணீர் வழங்குவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் இவரை, ஊராட்சித் தலைவர் இளங்கோவன் கடுமையாக தாக்கியுள்ளார். அதனால் செல்வராஜுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு- செல்வராஜ், 10 நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் காவல்துறையினர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளனர்.
இதுசம்பந்தமாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதுடன், பிப்ரவரி 16-ம் தேதி ஒட்டன்சத்திரத்தில் மறியல் போராட்டத்தையும் அறிவித்துள்ளது. இப்போராட்டத்தில் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.ஆர். கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.