திங்கள், 26 அக்டோபர், 2009

2009-ஆம் ஆண்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து நடத்திய போராட்டங்கள்



சென்னை
துப்புரவு பணியாளர்களுக்கு சங்க அலுவலகம் ஒதுக்குவதில் தலையீடு.

மதுரை



உத்தப்புரத்தில் காவல்துறையின் அத்துமீறலுக்கு எதிரான போராட்டம், மாதர் சங்கம் மூலம் நீதிமன்ற வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறுவதில் வெற்றி. கோயிலில் பூஜை செய்யும் உரிமை, பேருந்து நிறுத்த நிழற்குடை உள்ளிட்ட பிற கோரிக்கைகளுக்கான போராட்டம் தொடர்கிறது.

கோவை
அருந்ததியர் மக்கள் குடியிருப்பு பகுதி மிகவும் சேதம் அடைந்ததை சரி செய்து தரும்படி போராட்டம் நடத்தப்பட்டது. பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றியம் வரப்பாளையம் மற்றும் இராமநாதபுரம் கிராமங்களில் உள்ள பொது மயானத்தில் தலித், அருந்ததியினர் மக்கள் சவ அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டித்து சாலை மறியல்.

திருச்சி
மணப்பாறை, கோட்டூர் பகுதியில் தலித் மக்களின் மயானப் பாதை மற்றும் இதர உரிமைகளுக்கான போராட்டம்.

திருப்பூர்
அவிநாசி பகுதியில் அருந்ததியர் வாழ்வுரிமை மாநாடு. திருப்பூரில் தீண்டாமை ஒழிப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

தஞ்சாவூர்
தலித் மக்களை இழிவுபடுத்தியும் அவதூறு செய்தும் ஆதிக்க சாதி அமைப்பு நடத்திய பிரச்சாரத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்.

சிவகங்கை
தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளை எதிர்த்துபல தலையீடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை
தலித் மக்களுக்கு மயான உரிமை, மயான உரிமை கோரி போராட்டம் நடந்தது. பல வன்கொடுமைகளுக்கு எதிராக தலையீடுகள் செய்யப்பட்டுள்ளன.

விருதுநகர்
அருந்ததியர் உள் ஒதுக்கீடு வெற்றி பெற்றதை வரவேற்று சிறப்பு மாநாடு, நத்தம்பட்டி தலித் மக்களுக்கான சமுதாயக் கூடம் மற்றும் நிலப்பட்டா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

காஞ்சிபுரம்
16 கிராமங்களில் தீண்டாமை வடிவம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நாகை
கோயிலில் ஆலய நுழைவுப் போராட்டம். வாட்டாக்குடி மயானம் அமைப்பதற்கான போராட்டம்.

கடலூர்
கடலூர் மாவட்டம்நல்லாத்தூர் ஆலய நுழைவு போராட்டம். விருத்தாசலம் பகுதி மயான இட ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான இயக்கம். சாதி மறுப்பு திருமணத்தை ஒட்டிய வன்கொடுமையை கண்டித்து போராட்டம்.

கிருஷ்ணகிரி
கல்கேரி ஆலய நுழைவு போராட்டம் வெற்றி பெற்றதையொட்டி தலித்துகள் மீது வன்கொடுமைகள் நடந்தன. அவற்றைக் கண்டித்து போராட்டம்.

விழுப்புரம்
திருக்கோவிலூர் வட்டம் காங்கியனூர் கிராமத்தில் உள்ள பொது கோவிலான திரௌபதி அம்மன் கோவிலில் தலித்துகள் வழிபட அனுமதி மறுப்பதைக் கண்டித்து ஆலய நுழைவுப்போராட்டம். திருவண்ணை நல்லூர் குளத்தில் குளிக்கும் போராட்டம். சங்கராபுரம் ஆலய நுழைவு போராட்டம். தலித் மக்களுக்கு முடிவெட்ட மறுத்ததை எதிர்த்து போராட்டம்.

நெல்லை
பந்தப்புளி ஆலய நுழைவு போராட்டம். சிவந்திபட்டி தலித் பகுதியில் பேருந்து நிறுத்தம் கோரி போராட்டம்.

இராமநாதபுரம்
தலித் இளைஞனை ஆதிக்க சக்திகள் குரல்வளையை நெரித்து பாதிப்பு ஏற்படுத்தியதைக் கண்டித்து போராட்டம்.

திருவண்ணாமலை
தாமரைப்பாக்கம் ஆலய நுழைவு போராட்ட வெற்றிக்குப்பிறகு தலித் மக்களும் இதர பகுதி மக்களும் இணைந்து ரேசன் பொருட்கள் வழங்கக் கோரி போராட்டம்.

வேலூர்
தலித் மக்களுக்கான நடைபாதையை வேலி போட்டு மறைத்ததை அகற்றக்கோரி போராட்டம். தலித் மாணவர் பொதுப்பானையில் தண்ணீர் குடித்ததால் ஆசிரியர் தாக்கியதைக் கண்டித்து போராட்டம்.

திண்டுக்கல்
இருளக்குடும்பன்பட்டியில் அருந்ததியர் மக்களுக்கு சுடுகாட்டுப் பாதைக்காக நடத்திய போராட்டம்.

சென்னை கோட்டை நோக்கி தலித்- பழங்குடி மக்கள் நாளை உரிமைப் பேரணி

சென்னை கோட்டை நோக்கி தலித்- பழங்குடி மக்கள் நாளை உரிமைப் பேரணி
சென்னை, அக். 25 -தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில், தலித்- பழங்குடி மக்களின் உரிமைப் பேரணி, சென்னை கோட்டை நோக்கி அக்டோபர் 27- செவ்வாயன்று நடைபெற உள்ளது. மன்றோ சிலையிலிருந்து காலை 10 மணியளவில் பேரணி புறப்படுகிறது. நிறைவாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் கூட்டம் நடைபெறுகிறது.பேரணி மற்றும் கூட்டத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.வரதராசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் மற்றும் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் அ.சவுந்தரராசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஎம் சட்டமன்றக்குழுத் தலை வர் கே.பாலபாரதி, பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.மகேந்திரன், ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் இரா. அதியமான், அருந்தமிழர் விடுதலை இயக்க மாநில அமைப் பாளர் கு.ஜக்கையன், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க பொதுச்செயலாளர் கே.ஆர்.கணேசன், டாக்டர் அம்பேத்கர் பேரவை தலைவர் சி.நிக்கோலஸ், அருந்த தியர் மகாசபைத் தலைவர் எம்.மரியதாஸ், “களம்” அமைப்பாளர் பரதன், ஆதித் தமிழர் விடுதலை முன்னணி அமைப்பாளர் கோவை ரவிக்குமார், தமிழ்நாடு ஆதி ஆந்திரா அருந்ததியர் மகாசபைத் தலைவர் கே.ஆர்.நாகராஜன், அம்பேத்கர் கிராம மக்கள் மனித உரிமை இயக்கத் தலைவர் சுப்பு, புரட்சிப் புலிகள் இயக்க அமைப்பாளர் எஸ்.கே.பழனிச்சாமி, நவஜீவன் டிரஸ்ட் இயக்குநர் நளன், அருந்ததியர் ஜனநாயக முன்னணி பொதுச்செயலாளர் எம்.கௌதமன், அருந்ததியர் விடுதலை முன்னணி தலைவர் தண்டபாணி, தமிழ்நாடு வெட்டியான்கள் சங்கத் தலைவர் எஸ். ரங்கசாமி, மாநில ஆலோசகர் எஸ்.எஸ்.மாயமலை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எஸ். செல்லையா, முன்னணியின் வடசென்னை மாவட்ட அமைப்பாளரும், திருவொற்றியூர் நகர்மன்றத் தலைவருமான ஆர்.ஜெயராமன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.கோரிக்கைகள்மக்கள் தொகைக்கு ஏற்ப, தலித் மக்களுக்கான இடஒதுக்கீட்டை 18 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக உயர்த்த வேண்டும்; பாதாளச் சாக்கடைகளை அகற்ற, மனிதர்களை பயன்படுத்தாமல், நவீன கருவிகளைப் பயன்படுத்துவதற்கான அரசாணை வெளியிட வேண்டும்; வெட்டியான்களை மயான உதவியாளர்கள் என பெயர் மாற்றம் செய்து, உள்ளாட்சி ஊழியராக்க வேண்டும்; ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்; அரசுப் பணிகளில் தலித்- பழங்குடியினருக்கான பின்னடைவு காலியிடங்களை தாமதமின்றி நிரப்ப வேண்டும்; அவர்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்திற்கு மக்கள் தொகைக்கு ஏற்ப துறை வாரியாக நிதி ஒதுக்கி முழுமையாக செலவு செய்ய வேண்டும்; தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பழுத டைந்த குடியிருப்பு மற்றும் தொகுப்பு வீடுகளை பழுதுநீக்க வேண்டும்; தலித் மக்களுக்கு நிலம் மற்றும் குடிமனைப் பட்டாக்கள் வழங்க வேண்டும்; பஞ்சமி நிலங்களை மீட்டுக்கொடுக்க வேண்டும்; பழங்குடி மக்க ளுக்கான வன உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்; ஆலயங்களில் தலித்துக்களுக்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும்; வன்கொடுமைச் தடுப்புச் சட்டத்தை உறுதியாக அமல்படுத்த வேண் டும்; விடுபட்ட அருந்ததியர் பிரிவினரையும் உள்ஒதுக் கீட்டிற்கு கொண்டுவந்து அதன் அளவை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உரிமைப் பேரணி நடைபெறுகிறது.