புதன், 4 நவம்பர், 2009

தீண்டாமை ஒழிப்பு இயக்கமும் அக். 27 பேரணியும் -பி. சம்பத்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் சமீபகாலப் போராட்டங்களும், அக்டோபர் 27ல் சென்னை மாநகரில் பதினைந்தாயிரம் பேர் பங்கேற்ற மகத் தானப் பேரணியும் தமிழ்நாட்டில் தலித் - பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டங் களில் ஒரு திருப்புமுனையாக அமைந் தன என்பதில் ஐயமில்லை. இப்பேரணி யில் பங்கேற்றவர்களில் கணிசமானவர் கள் தலித்துகள். தீண்டாமை என்பது தலித் மக்களின் பிரச்சனையல்ல. மாறாக அது தேசத்தின் இழிவு - ஜன நாயக இயக்கங்களுக்குச் சவால் என்ற முறையில் இந்த தீண்டாமை ஒழிப்புப் பேரணியில் பல தலித் அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு வர்க்க, வெகுஜன அமைப்புகளைச் சார்ந்தவர்களும் ஜன நாயக உள்ளம் படைத்த தனிநபர்களும் இணைந்து கலந்து கொண்டனர். இது இப்பேரணியின் தனித்த அம்சமாகும்.


போர்ப்படை பேரணி

பேரணியில் பங்கேற்றவர்களில் குறிப் பிடத்தக்க எண்ணிக்கையினர் இளை ஞர்கள் மற்றும் பெண்கள் என்பது இதன் மற்றொரு சிறப்பு அம்சமாகும். ஏராளமான பேனர்களும், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளும், தலித் மக்களின் வாழ்வுரி மையைச் சித்தரிக்கும் ஓவியங்களு மாகச் சேர்ந்து இப்பேரணியின் தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பேரணியில் பங்கேற்றோர் எழுப்பிய முழக்கங்களும் அணிவகுப்பும் பார்த் தோரை பரவசமடையச் செய்தது. வர்க் கச் சுரண்டலையும் சமூக அநீதியையும் ஒருசேர அழிக்க முனையும் போர்ப்படை யாக இந்த அணிவகுப்பு அமைந்தது என்றால் அது மிகையல்ல.


தமிழக முதல்வருடன் சந்திப்பு - கோரிக்கைகள் ஏற்பு

பேரணியின் நிறைவாக தோழர்கள் என்.வரதராஜன், கே. வரதராசன், பி. சம் பத், பெ.சண்முகம், கே. பாலபாரதி, கே. மகேந்திரன், கே.ஆர். கணேசன், கு. ஜக் கையன், மாசிலாமணி, மோகன் ஆகி யோர் கொண்ட குழு, தமிழக முதல்வரை சென்னை கோட்டையில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அளித்தது. கோரிக்கைகள் குறித்து சுமார் அரை மணிநேரம் தமிழக முதல்வருக்கும் தலைவர்களுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது.


கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை முழுமையாகப் படித்த தமிழக முதல்வர், அனைத்துக் கோரிக்கைகளுமே தமிழக அரசுக்கு ஏற்புடையதுதான் எனத் தெரி வித்தார்.


* மாநகராட்சிகளில் பாதாளச் சாக் கடை மரணங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து மாநகராட்சி களிலும் பாதாளச் சாக்கடை அடைப்பு களை அகற்றும் இயந்திரங்கள் கொள் முதல் செய்யப்பட்டு வருவதாகவும், நக ராட்சிகளிலும் இதற்கான நடவடிக்கை கள் எடுக்கப்படும் என்றும் இதைப் போல் மனிதக் கழிவை மனிதர்கள் அகற் றும் பணியும் முற்றிலுமாக துடைத்தெறி யப்படும் எனவும் தெரிவித்தார்.


* தமிழ்நாட்டில் தலித் - பழங்குடி மக்களின் பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்து தீர்வுகாணவும், தலித்-பழங் குடி மக்களின் பிரச்சனைகளில் அவ்வப் போது தலையிடவும் அகில இந்திய அள வில் செயல்படும் தலித் - பழங்குடியினர் ஆணையம் போல சட்டப்பூர்வமான அதிகாரமும் அந்தஸ்தும் கொண்ட தமிழ் நாடு அளவிலான ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீ லித்து விரைவில் முடிவு எடுப்பதாக தெரி வித்தார்.


* விடுதலைப் போராளி ஒண்டிவீர னுக்குத் தமிழக அரசின் சார்பாக சிலை யும், நினைவகமும் நிறுவிட ஏற்றுக் கொள்வதாகவும் விரைவில் இதனை அமல்படுத்துவதாகவும் தெரிவித்தார்.


* சிபிஐ (எம்) மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியபடி அருந்ததியர் மக்களுக்கு தமிழக அரசு 3 சதமான உள்ஒதுக்கீடு வழங்கியிருப் பதைச் சுட்டிக்காட்டிய தமிழக முதல்வர், இம்மக்களின் இதர கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண உரிய நடவடிக்கைகள் மேற் கொள்வதாகத் தெரிவித்தார்.


* செப்டம்பர் 30ல், அமரர் பி.சீனிவாச ராவ் நினைவு தினத்தன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய ஆலய நுழைவு இயக்கத்தின் போது காவல்துறை யினர் விழுப்புரம் மாவட்டம், காங்கியனூ ரில் நடத்திய தடியடித் தாக்குதலையும் இதில் ஜி. லதா எம்.எல்.ஏ., மிகவும் பாதிக் கப்பட்டதையும், கே. பாலகிருஷ்ணன் (விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர்), ஜி. ஆனந்தன் (சிபிஐ (எம்)) விழுப்புரம் மாவட்டச் செயலாளர்), உள் பட 103 பேர் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டதையும் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து கொண்டிருப்ப தையும் சுட்டிக்காட்டி, இச்சம்பவங்கள் பற்றி நீதிவிசாரணை நடத்தி தவறிழைத்த காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் இதர அதிகாரிகள் மீது நடவடிக் கை எடுக்குமாறும், வழக்குகளை வாபஸ் பெறுமாறும் கோரிய போது; இது சம்பந்த மாக உடனடியாகத் தலையிடுவதாகவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக வும் தெரிவித்தார்.


* தர்மபுரி நகராட்சி செங்கொடிபுரத் தில் 62 ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் பல்வேறு சமூகப் பிரிவினருக்கு தமிழ்நாடு அரசு குடிமனைப்பட்டா வழங்கியுள்ள நிலையில், அருந்ததியர் பிரி வினருக்கு மட்டும் குடிமனைப்பட்டா வழங்கவில்லை. தர்மபுரி நகராட்சி தவ றான முறையில் இம்மக்களை அங்கி ருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. செங்கொடிபுரம் தலித் மக்க ளுக்கு ஆதரவாகப் பலகட்டப் போராட் டங்கள் நடந்துள்ளன. தமிழக முதல்வர் இப்பிரச்சனையில் தலையிட்டு இம்மக் களுக்கு பட்டா வழங்க வேண்டுமென வற்புறுத்திய போது , அதில் உடனடியாகத் தலை யிடுவதாக ஏற்றுக் கொண்டார்.


* தமிழ்நாட்டின் ஏராளமான ஆலயங் களில் தலித்துகளுக்கு சம உரிமை மறுக் கப்படுவதையும், சட்டத்தையும் நீதிமன் றத் தீர்ப்புகளையும் மீறும் வகையில் பல இடங்களில் சாதிய சக்திகள் செயல்படு வதையும், அரசு நிர்வாகத்தின் செயல்பா டும் பல இடங்களில் சட்டப்பூர்வமான தாக இல்லை என்பதையும் கவனத் திற்கு கொண்டு வந்த போது காங்கியனூ ரிலும், செட்டிப்புலத்திலும் தமிழக அரசு, தலித் மக்களை ஆலயத்திற்கு அழைத் துச் சென்றதைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசு இத்தகைய பிரச்சனைகளில் உறு தியான நடவடிக்கைகளை மேற்கொள் ளும் எனத் தெரிவித்தார்.


* பழங்குடி மக்களின் வனவுரிமைச் சட்டத்தை உறுதியுடன் அமல்படுத்த வேண்டும் எனக் கோரியபோது தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை எல்லா மாவட்டங்களிலும் எடுத்து வருவ தாகவும் இப்பணி விரைவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் பழங் குடி மக்களுக்கு என தனி ஆணையர் நிய மனம் செய்யப்பட்டாலும் இவர்களுக்கு என தனித்துறை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


* பல்லாயிரக்கணக்கான தலித் பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்திய போது, முந்தைய அரசு நிரப்பாமல் வைத் திருந்த காலியிடங்கள் உள்பட ஏராள மான பதவிகளை தற்போதைய அரசு நிரப்பி வருவதாகவும், தலித்-பழங்குடி பின் னடைவு காலியிடங்கள் நிரப்பப்படவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் எனவும் தெரிவித்தார்.


* தலித் மக்களுக்கான பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டி ருப்பதாகவும், இப்பணியை அரசு தொடர்ந்து முழு அளவில் நிறைவேற்றும் எனத் தெரிவித்தார்.


* தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடு மைகளுக்கு முடிவு கட்ட தீண்டாமை ஒழிப்புச் சட்டம், வன்கொடுமைத் தடுப் புச் சட்டங்களின் அமலாக்கத்தை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்றுக் கொண்டார்.


* தலித்-பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 18 சதவிகிதத்திலிருந்து 19 சதவிகிதமாக உயர்த்துவது, தலித் -பழங்குடி மக்களுக்கு நிலம் வழங்குவது, பஞ்சமி நிலங்களை மீட்டுத் தருவது, வீட்டுமனைப்பட்டா வழங்குவது, தலித் - பழங்குடி மக்ளுக்கு, அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப பட்nஜட்டின் உபதிட் டத்தில் நிதி ஒதுக்கி, அதனை முழுமை யாகச் செலவிடுவது உள்பட உள்ள கோரிக்கைகளை பரிசீலித்து படிப்படி யாக நிறைவேற்ற ஆவன செய்வதாகத் தெரிவித்தார்.


இவ்வாறு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அக்டோபர் 27 பேரணி யில் முன்வைத்த பல்வேறு கோரிக்கை களை பேச்சுவார்த்தையின் போது தமி ழக முதலமைச்சர் ஏற்றுக் கொண்டதும், இவற்றை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்ததும் வரவேற்கத்தக்க அம்சமாகும். இதோடு திமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழ் முரசொலி (30.10.09) யில் அக்டோபர் 27 பேரணி குறித்தும் பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட சில பிரதான அம்சங்கள் குறித்தும் தமிழக முதல்வர் அவர்களே ஒரு சிறப்புக் கட்டுரையும் எழுதியுள்ளார்.


தலித் - பழங்குடி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு சொல் அளவிலும், எழுத்து அளவிலும் ஏற்றுக் கொண்டதோடு மட்டுமின்றி, செயல் வடிவிலும் உறுதியாக அமல்படுத்தும் என நம்புகிறோம் - எதிர்பார்க்கிறோம்.


சமீபகால வெற்றிகள்

சமீப ஆண்டுகளில் சிபிஐ (எம்) மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி எடுத்த முயற்சிகளாலும் நடத்திய போராட்டங்களாலும்;


* அருந்தியர் உள் ஒதுக்கீடு 3 சதம் கிடைத்தது.


* உத்தப்புரம் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு தலித் மக் களுக்குப் பொதுப்பாதை கிடைத்தது.


* திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம் அக்னீஸ்வரர் கோவில்;


* திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடி காளியம்மன் கோவில்


* நெல்லை மாவட்டம், பந்தப்புளி மாரியம்மன் கோவில்


* பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட் டை தாலுகா பாதாங்கி கிராமம் சிவன் கோவில்


* பெரம்பலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் காசிவிஸ்வ நாதர் கோவில்


* திருவண்ணாமலை மாவட்டம், வேட வந்தாடி கிராமம் கூத்தாண்டவர் கோவில்


* விழுப்புரம் மாவட்டம், காங்கியனூர் கிராமம் திரௌபதியம்மன் கோவில்


* நாகை மாவட்டம் செட்டிப்புலம் கிராமம் ஏகாண்ட ஈஸ்வரர் கோவில்


- ஆகிய ஆலயங்களில் தலித் மக்களின் ஆலயப் பிரவேசம் வெற்றி பெற்றது.

தமிழகத்தில் பல கிராமங்களில் இரட் டைக் குவளை முறை ஒழிப்பு, முடிவெட்டும் உரிமை, பொதுப்பாதையை பயன் படுத்தும் உரிமை, சலவையகங்களில் துணி சலவை செய்துதரும் உரிமை, பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்தும் உரிமை, பொது மயான உரிமை, தனி மயானத்தில் பாதை உரிமை என பல தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் வெற்றி கிடைத்தன.


இந்த வெற்றிகளின் தாக்கமும் உற் சாகமும் அக்டோபர் 27 பேரணியில் பிரதி பலித்தன. பல்லாயிரம் பேர் பங்கேற்பு இதன் சாட்சியம். இப்பேரணியானது தற் போது வேறு பல புதிய வெற்றிகளையும் குவித்துள்ளன.



போராட்டங்கள் தொடரும்

தலித் - பழங்குடி மக்களின் உரிமை களுக்கான நமது கடந்த காலப் பாதை கரடுமுரடானது. பயணமோ சவால்கள் நிறைந்தது. தாக்குதலும் அச்சுறுத்தலும் கூடவே வந்தன. ஆனால் இவை எதுவும் நமது பயணத்தைத் தடுக்க முடியவில்லை; வெற்றிகளை வீழ்த்த முடியவில்லை - இந்த அனுபவங்களோடு நமது பயணத்தைத் தொடர்வோம் - ஒடுக்கப்பட்ட மக் களின் சமூக உரிமைகளுக்கு மட்டு மின்றி, வாழ்வாதார உரிமைகளுக்கும் சேர்ந்தே போராடுவோம். சுரண்டலும் ஒடுக்குமுறைகளும் ஒழிக்கப்படும் வரை நமது போராட்டங்கள் தொடரும்.