திங்கள், 18 ஜனவரி, 2010

மழையால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்கள்

கோத்தகிரி கெந்தோனை ஆதிவாசி கிராமத்தில், மலைப் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத் தில் நீலகிரியில் பெய்த கனமழையால் இந்த வீடுகள் சேதம் அடைந்தன.

இந்நிலையில் இந்த வீடுகளை உடனடியாக சீரமைத்து கட்டி ஆதிவாசி மக்களுக்கு வழங்க வேண்

டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வாலிபர் சங்கத்தினர், கோத்தகிரி மார்க்

கெட் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோத்தகிரி பகுதி வாலிபர் சங்க செயலாளர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ரஞ்சித்குமார் போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். ஜே.ஆல்தொரை, குருமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போராட்டத்தை ஆதரித்துப் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோத்தகிரி பகுதி செயலாளர் தர்மராஜ், மாரியப்பன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். (ஜனவரி 5, 2010 வெளியான செய்தி)