செவ்வாய், 8 டிசம்பர், 2009

பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிலம் எவ்வளவு? - பி.ஆர்.நடராஜன் எம்.பி. கேள்வி

பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிலம் எவ் வளவு என்று மார்க்சிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர்கள் பதில் அளித் துள்ளனர்.

நிலச்சீர்திருத்தங்கள் ஆணையச் சட்டத்தின் மூலம் கடந்த மூன்றாண்டு களில் ஒவ்வொரு மாநிலத் திலும் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்ட நிலத்தின் விவரம் என்ன என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எழுப்பிய வினாவிற்கு, அமைச்சர் பதிலளித்துள்ளார்.

மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் இணை அமைச் சர் டாக்டர் துஷார்பாய் ஏ. சௌத்திரி எழுத்துமூலம் பதிலளிக்கையில், ‘நிலம் மற்றும் அதன் மேலாண்மை’ என்பது மாநிலப் பட்டிய லில் வருகிறது என்றும், ஆயினும் மத்திய அரசின் சார்பில் இயங்கும் நிலவளத் துறை, மாநிலங்களில் அமல் படுத்தப்படும் நிலச்சீர் திருத் தங்களை ஒருங்கிணைத் திடும் ஓர் அமைப்பாக செயல் பட்டு வருகிறது என்றும் கூறினார். மேலும், மாநிலங் கள் ரீதியாக பழங்குடியி னருக்கு அளிக்கப்பட்டுள்ள உபரி நிலங்களின் விநியோ கம் தனியே இணைக்கப்பட் டிருக்கிறது என்று கூறினார்.

அந்த பட்டியலில், 2007 ஆம் ஆண்டில் மொத்தம் 7 லட்சத்து 95 ஆயிரத்து 886 ஏக்கர் நிலம் விநியோகிக்கப் பட்டிருக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 931 ஏக்கரும், தமிழ் நாட்டில் 320 ஏக்கரும் விநி யோகிக்கப்பட்டிருக்கிறது.

2008ஆம் ஆண்டில் மொத் தம் 7 லட்சத்து 79 ஆயிரத்து 858 ஏக்கர் நிலம் விநியோ கிக்கப்பட்டிருக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 394 ஏக்கரும், தமிழ்நாட்டில் 320 ஏக்கரும், புதுச்சேரியில் நிலம் எதுவும் விநியோகிக் கப்படவில்லை.

2009ஆம் ஆண்டில் மொத் தம் 7 லட்சத்து 89 ஆயிரத்து 288 ஏக்கர் நிலம் விநியோ கிக்கப்பட்டதில், மேற்கு வங் கத்தில் 2 லட்சத்து 22 ஆயி ரத்து 394 ஏக்கரும், தமிழ் நாட்டில் 320 ஏக்கரும் புதுச் சேரியில் நிலம் விநியோ கிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த மூன்றாண்டுகளில் நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட நிலத் தின்அளவு என்ன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர். நடராஜன் எழுப்பிய வினாவிற்கு, அமைச்சர் டி.நெப்போ லியன் பதிலளித்துள்ளார்.

அமைச்சர் எழுத்து மூலம் பதிலளிக்கையில், உபரி நிலங்கள் கையகப் படுத்தல் மற்றும் விநியோ கம் தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை மற் றும் நிலச்சீர்திருத்தங்கள் துறை கவனித்து வருகின் றன என்றும், அவற்றிடமி ருந்து பெறப்பட்ட விவரங் களின் அடிப்படையில், கடந்த மூன்றாண்டுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட நிலத் தின் விவரம் தனி இணைப் பாகத் தரப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.

இவ்வாறு அளிக்கப்பட் டுள்ள இணைப்பில், 2007 ஆம் ஆண்டில் மொத்தம் 18 லட்சத்து 33 ஆயிரத்து 129 ஏக்கர் நிலம் விநியோகிக்கப் பட்டிருக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 4 ஏக்கரும், தமிழ்நாட்டில் 20 ஆயிரத்து 999 ஏக்கரும், புதுச்சேரியில் 640 ஏக்கரும் விநியோகிக் கப்பட்டிருக்கின்றன.

2008ஆம் ஆண்டில் மொத்தம் 18 லட்சத்து 32 ஆயிரத்து 556 ஏக்கர் நிலம் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 777 ஏக்கரும், தமிழ்நாட்டில் 71 ஆயிரத்து 192 ஏக்கரும், புதுச்சேரியில் 640 ஏக்கரும் விநியோகிக்கப்பட்டிருக் கின்றன.

2009ஆம் ஆண்டில் மொத் தம் 18 லட்சத்து 01 ஆயிரத்து 833 ஏக்கர் நிலம் விநியோ கிக்கப்பட்டதில், மேற்கு வங்கத்தில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 777 ஏக்கரும், தமிழ்நாட்டில் 71 ஆயிரத்து 262 ஏக்கரும், புதுச்சேரியில் 640 ஏக்கரும் விநியோகிக் கப்பட்டிருக்கின்றன என்று பதிலில் கூறப்பட்டுள்ளது. (தீக்கதிர், 3.12.09)