புதன், 24 மார்ச், 2010

வெண்மணி தியாகிகள் நினைவிட நிதி: ரூ.1 லட்சம் வழங்கிய சாலைப் பணியாளர்கள்

சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டு நிறைவுப் பொதுக்கூட்டம் திருப்பூர் டவுண் ஹாலில் நடை பெற்றது. மாநிலத் தலைவர் மா.சண்முகராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளரும்- அரூர் சட்டமன்ற உறுப்பினருமான டில்லிபாபு, சிஐடியு மாநிலச் செயலாளர் பா.விக்ரமன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அப்போது அவர்களிடம் வெண்மணி தியாகிகள் நினைவக கட்டட நிதியாக ரூ. 75 ஆயிரம் வழங்கப்பட்டது. ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ. 25 ஆயிரத்துடன் சேர்த்து, சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் இதுவரை ரூ. 1 லட்சம் நிதி வழங்கப்பட்டு உள்ளது.