புதன், 24 மார்ச், 2010

சிபிஎம் தொடர் முயற்சியால் தலித் மக்களுக்கு மின்சாரம் கிடைத்தது

தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசியின் தொகுதிக்கு உட்பட்ட பூதகுடியில், அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெற்றும், மின் வசதியில்லாததால் அதைப் பயன்படுத்த முடியாத நிலையில் ஒரு பகுதி தலித் மக்கள் இருந்தனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இப்பிரச்சனை தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளையும், மாவட்ட நிர்வாகத்தையும் அணுகி தொடர்ந்து முறையிட்டதன் அடிப்படையில், ஓராண்டாக தவித்த மக்களுக்கு, ஒரு வழியாய் மின்சாரம் கிடைத்துள்ளது. மின்வாரிய அதிகாரி கள் புதனன்று மின்கம்பங்களை நட்டு, மின்சார இணைப்பு வழங்கினர்.
இதில், இலவச மின்சாரம் பெற்ற தலித் மக்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.