வியாழன், 4 மார்ச், 2010

வங்கிக்கடன் கேட்டு நெறிக்குறவர்கள் மனு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் பெரும் பண்ணையூரில் வசிக்கும் நெறிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 14 குடும்பத்தினர், தொழிற்கடன் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலுடன், மாவட்ட ஆட்சியர் எம்.சந்திரசேக ரனை சந்தித்த நெறிக்குறவர் சமூகத் தலைவர் சொ.காளிமுத்து, வங்கிகள் தங்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அச்சமூகத்தினரின் கோரிக்கையை அக்கறையுடன் ஏற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.