செவ்வாய், 5 ஜனவரி, 2010

வலங்கைமான் வட்டத்தில் தீண்டாமை

வலங்கைமான் பேரூராட்சி- நான்காவது வார்டு வளையமாபுரத்தில், பேரூராட்சிக்குச் சொந்தமான பாதை வழியாக, இறந்த தலித் மக்களின் உடலை எடுத்துச் செல்ல ஆதிக்க சக்திகள் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர். மேலும், இந்த வட்டத்தில் குடிமனைப்பட்டா மற்றும் குடும்ப அட்டைகள் போன்றவை கிடைக்காமலும் தலித்மக்கள் அவதிப்படுகின்றனர்.

எனவே இந்தக் கொடுமைகளை எதிர்த்து ஜனவரி 8 அன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதென, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அறிவித்துள்ளன. கட்சியின் மூத்தத் தலைவர் கோ.வீரையன், முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

-(19.12.2009 அன்று செய்தியானது)