செவ்வாய், 5 ஜனவரி, 2010

அருந்ததியர்கள் மீது பொய்வழக்கு வாபஸ் கோரி சிபிஎம் போராட்டம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியில் தலித் அருந்ததியர் மக்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபயணம் - ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பந்தல்குடி முதல் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ அலுவலகம் வரையிலான நடைப்பயணத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.சந்திரமோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியன் நடைபயணத்தைத் துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ், எஸ்.பூங்கோதை ஆகியோர் பேசினர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ் கண்டன உரையாற்றினார். அண்ணாத்துரை, கணேசன், செல்லத்துரை ஆகியோர் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

-(21.12.2009 அன்று செய்தியானது)