செவ்வாய், 5 ஜனவரி, 2010

அசமத்துவம் நிலவும் நாட்டில் "பொதுத்திறமை" என்பது சாத்தியமல்ல! - பி.சம்பத் பேச்சு

கோவையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் பேசியதாவது:

வெற்று மனித நேயங்கள் ஒருபோதும் சமத்துவத்தை கொண்டு வராது. தமிழக முதல்வர் ‘தாழ்த்தப்பட்ட மக்கள் அடித்தட்டு மக்களல்ல, அடித்தளமானவர்கள்’ என்கிறார். அடித்தளமானவர்கள் என்றால் சமூகப் பொருளாதாரத் துறையில் அவர்களா ஆதிக்கம் செலுத்துகிறார்கள்?

இடதுசாரிகளின் சமூகப் பார்வையை புரிந்து கொள்ளாதவர்கள், வர்க்கப் போராட்டம் நடத்துவோருக்கு சமூகப் பிரச்சனையில் என்ன அக்கறை? என்று கேட்கின்றனர். இந்தியா

வில் வர்க்கமும், சாதியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. இந்திய தலித் மக்களில் 99 சதவிகிதம் பேர் சொத்துக்களற்ற பாட்டாளி மக்கள். அதனால்தான் இரண்டையும் இணைத்துப் போராடுகிறோம்.

நமது நாட்டில் நிலவும் அசமத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் ‘பொதுத் திறமை’ என்று பேசுகிறார்கள். அது எப்படி சாத்தியம்? வளர்ப்பு, சூழல், வாய்ப்பு இணைந்தது தானே திறமை. பெற்றோர் படித்திருந்தால் தான், தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பார்களாம். அப்படியானால் தலித் மக்கள் எப்படிக் கல்வி பெற முடியும்?

கோவையில் துவங்கியுள்ள இந்த கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் அமைப்பு. இந்த அம்பேத்கர் மையம் செய்யும் பணி, அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய பணி. சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் இந்த மையத்தை பொறுப்பேற்றுத் தொடங்கும் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கமும், அதன் ஊழியர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

தலித் மக்களின் 18 சதவிகித இடஒதுக்கீடு என்பது பொதுப்போட்டியில் தேர்வுசெய்த பின்னர்தான். ஆனால் 18 சதவிகிதம் இடஒதுக்கீடு போக பொதுப்போட்டியில் தலித்துகள் போட்டியிட முடியும் என்பதே மறுக்கப்படுகிறது. மறக்கடிக்கப்படுகிறது. எனவே நாம் நமது உரிமை

களைப் பெறுவதில் எப்போதும் விழிப்போடிருக்க வேண்டும்.

இவ்வாறு பி.சம்பத் பேசினார்..