திங்கள், 22 பிப்ரவரி, 2010

பாதை கேட்டு தலித் மக்கள் பிணத்துடன் மறியல்

தேனி ஊஞ்சாம்பட்டி இந்திரா காலனி தலித்மக்கள், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் பாதையை நில உரிமையாளர்கள் அடைத்து விட்ட நிலையில், தனியாக பாதை அமைத்துத்தர வேண்டுமென பலமுறை அதிகாரி களிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் போத்தன் மகன் ராஜா என்பவர் திடீரென மரணமடைந்து விட்டார். அவரை சுடுகாட்டிற்குத் தூக்கிச் செல்ல பாதையில்லை. இதையடுத்து, சுடுகாட்டுக்குச் செல்ல பாதை கேட்டு, பாடையுடன் தேனி-திண்டுக்கல் சாலையில் தலித்மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கோட்டாட்சியர் சுப்பிரமணி, வட்டாட்சியர் குழந்தைவேல் ஆகியோர் தலித் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வாரத்தில் பாதை அமைத்துத்தருவதாக அளித்த உறுதிமொழியை அடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.