செவ்வாய், 8 டிசம்பர், 2009

பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிலம் எவ்வளவு? - பி.ஆர்.நடராஜன் எம்.பி. கேள்வி

பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிலம் எவ் வளவு என்று மார்க்சிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர்கள் பதில் அளித் துள்ளனர்.

நிலச்சீர்திருத்தங்கள் ஆணையச் சட்டத்தின் மூலம் கடந்த மூன்றாண்டு களில் ஒவ்வொரு மாநிலத் திலும் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்ட நிலத்தின் விவரம் என்ன என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எழுப்பிய வினாவிற்கு, அமைச்சர் பதிலளித்துள்ளார்.

மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் இணை அமைச் சர் டாக்டர் துஷார்பாய் ஏ. சௌத்திரி எழுத்துமூலம் பதிலளிக்கையில், ‘நிலம் மற்றும் அதன் மேலாண்மை’ என்பது மாநிலப் பட்டிய லில் வருகிறது என்றும், ஆயினும் மத்திய அரசின் சார்பில் இயங்கும் நிலவளத் துறை, மாநிலங்களில் அமல் படுத்தப்படும் நிலச்சீர் திருத் தங்களை ஒருங்கிணைத் திடும் ஓர் அமைப்பாக செயல் பட்டு வருகிறது என்றும் கூறினார். மேலும், மாநிலங் கள் ரீதியாக பழங்குடியி னருக்கு அளிக்கப்பட்டுள்ள உபரி நிலங்களின் விநியோ கம் தனியே இணைக்கப்பட் டிருக்கிறது என்று கூறினார்.

அந்த பட்டியலில், 2007 ஆம் ஆண்டில் மொத்தம் 7 லட்சத்து 95 ஆயிரத்து 886 ஏக்கர் நிலம் விநியோகிக்கப் பட்டிருக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 931 ஏக்கரும், தமிழ் நாட்டில் 320 ஏக்கரும் விநி யோகிக்கப்பட்டிருக்கிறது.

2008ஆம் ஆண்டில் மொத் தம் 7 லட்சத்து 79 ஆயிரத்து 858 ஏக்கர் நிலம் விநியோ கிக்கப்பட்டிருக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 394 ஏக்கரும், தமிழ்நாட்டில் 320 ஏக்கரும், புதுச்சேரியில் நிலம் எதுவும் விநியோகிக் கப்படவில்லை.

2009ஆம் ஆண்டில் மொத் தம் 7 லட்சத்து 89 ஆயிரத்து 288 ஏக்கர் நிலம் விநியோ கிக்கப்பட்டதில், மேற்கு வங் கத்தில் 2 லட்சத்து 22 ஆயி ரத்து 394 ஏக்கரும், தமிழ் நாட்டில் 320 ஏக்கரும் புதுச் சேரியில் நிலம் விநியோ கிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த மூன்றாண்டுகளில் நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட நிலத் தின்அளவு என்ன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர். நடராஜன் எழுப்பிய வினாவிற்கு, அமைச்சர் டி.நெப்போ லியன் பதிலளித்துள்ளார்.

அமைச்சர் எழுத்து மூலம் பதிலளிக்கையில், உபரி நிலங்கள் கையகப் படுத்தல் மற்றும் விநியோ கம் தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை மற் றும் நிலச்சீர்திருத்தங்கள் துறை கவனித்து வருகின் றன என்றும், அவற்றிடமி ருந்து பெறப்பட்ட விவரங் களின் அடிப்படையில், கடந்த மூன்றாண்டுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட நிலத் தின் விவரம் தனி இணைப் பாகத் தரப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.

இவ்வாறு அளிக்கப்பட் டுள்ள இணைப்பில், 2007 ஆம் ஆண்டில் மொத்தம் 18 லட்சத்து 33 ஆயிரத்து 129 ஏக்கர் நிலம் விநியோகிக்கப் பட்டிருக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 4 ஏக்கரும், தமிழ்நாட்டில் 20 ஆயிரத்து 999 ஏக்கரும், புதுச்சேரியில் 640 ஏக்கரும் விநியோகிக் கப்பட்டிருக்கின்றன.

2008ஆம் ஆண்டில் மொத்தம் 18 லட்சத்து 32 ஆயிரத்து 556 ஏக்கர் நிலம் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 777 ஏக்கரும், தமிழ்நாட்டில் 71 ஆயிரத்து 192 ஏக்கரும், புதுச்சேரியில் 640 ஏக்கரும் விநியோகிக்கப்பட்டிருக் கின்றன.

2009ஆம் ஆண்டில் மொத் தம் 18 லட்சத்து 01 ஆயிரத்து 833 ஏக்கர் நிலம் விநியோ கிக்கப்பட்டதில், மேற்கு வங்கத்தில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 777 ஏக்கரும், தமிழ்நாட்டில் 71 ஆயிரத்து 262 ஏக்கரும், புதுச்சேரியில் 640 ஏக்கரும் விநியோகிக் கப்பட்டிருக்கின்றன என்று பதிலில் கூறப்பட்டுள்ளது. (தீக்கதிர், 3.12.09)

தலித் மக்களின் நிலங்களை எடுக்க அரசு முயற்சி - கே.பி. பெருமாள்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைத் திட நிலம் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.

ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட முப்புலிவெட்டி, மேட்டூர், லட்சுமிபுரம், சுப்பிரமணியபுரம், மேலமீனாட்சிபுரம், தெற்கு ஆவரங்காடு, வடக்கு பரம்பூர், ஓட்டப்பிடாரம், தெற்கு பரம்பூர் ஆகிய கிராமங்களிலும், குறுக்குச்சாலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கீழ மீனாட்சிபுரம், ராமச்சந்திராபுரம் ஆகிய 11 கிராமங்களின் விவசாய விளைநிலங்களில் 1553.85 ஏக்கர் நிலத்தை அரசு கையகப் படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த விளைநிலங்கள் முழுவதும் கரிசல் பூமி. தற்போது 90சதவீத நிலங்கள் கடந்த மூன்றாண்டு காலமாக விவசாயம் செய்து வருகிற பகுதி என்று அரசின் அடங்கலில் உள்ளது. இங்கு உளுந்து, பாசிபயறு, தட்டை பயிறு, பருத்தி, எள், திணை, சோளநாத்து, சூரியகாந்தி, மக்காச்சோளம் போன்றவை களை பிரதானமாக விவசாயம் செய்து வரு கின்றனர்.

இந்த 11 கிராமங்களிலும் 15 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். 1500 குடும் பங்கள் இந்த விளைநிலங்களை பயன்படுத்தி விவசாயம் செய்கின்றன. இதில் 70சதவீத நிலங்கள், தலித் மக்களுடைய நிலங்களாகும். இந்த பகுதியில்தான் பெரும்பகுதியான தலித்துகள் நிலஉடைமையாளராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியபுரம், லெட்சுமிபுரம் கிராமங் களில் ஊரைச்சுற்றி நிலங்கள் இருக்கின்றன. இந்த நிலங்களை எடுத்தால் அங்கு மக்கள் குடியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்களுடைய வீடுகள் தவிர மற்ற நிலங்கள் முழுவதையும் அரசு எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.

ஆடு, மாடு, கோழிகள் கூட மேய்வதற்கு இந்த கிராமங்களில் நிலம் இல்லாமல் போய்விடும். இந்த இரண்டு கிராமங்களிலும் சுகாதார வசதிகள், பஸ் போக்குவரத்து, நல்ல சாலை வசதிகள், சுப்பிரமணியபுரத்தில் பள்ளிக்கூட வசதி இல்லை, அங்கன்வாடி (பாலகர் பள்ளி) பள்ளி கூட இல்லை. இந்த இரண்டு கிராம மக்களும் பிரதான சாலைக்கு செல்ல வேண்டுமானால் 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். கடை வீதிக்கு செல்ல வேண்டுமானால் 4 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும்.

இப்படி எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஊரில் குடியி ருக்க ஒரே காரணம், தங்களின் சொந்த நிலம் இங்கு உள்ளது. அதன் வருவாயில் தங்கள் வாழ்க்கையை இங்கு செலுத்த முடிகிறது என்ற நம்பிக்கையில் இந்த இரண்டு கிராமங் களிலும் மக்கள் குடியிருக்கிறார்கள்.

அரசு சிப்காட்டிற்கு நிலம் எடுக்கப் போகி றது என்ற செய்தி வெளியான உடன் அனைத்து கிராமங்களின் சார்பில் 26.10.09ல் தாலுகா அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனர்.

தமிழக அரசு, நிலம் இல்லாத ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்குகிறோம் என்று பல புள்ளி விவரங்களை தெரிவித்தும், பல விளம்பரங்கள், பிரச்சாரங்களையும் நடத்தி வருகிறது.

ஆனால் மறுபுறுத்தில், தலித்துகள் பெரும்பகுதியினர் நில உடைமையாளராக உள்ள இந்த பகுதியில், அவர்களுடைய நிலத் தை சிப்காட்டிற்காக அரசு எடுத்து விட்டால் அந்த தலித்துகள் நிலமற்ற கூலிகளாக மாற வேண்டிய நிலையை தமிழக அரசே உருவாக்குகிறது. அதாவது நிலம் இருப்பவர்களை நிலம் இல்லாதவர்களாகவும், நிலம் இல்லாத வர்களை நிலம் உள்ளவர்களாகவும் அரசு மாற்றுகின்ற கொள்கை இதில் புலப்படும். தமிழக அரசின் நில விநியோகத் திட்டத்தில் முரண்பாடான நிலையை இதன் மூலம் உணர முடிகிறது.

எனவே, ஓட்டப்பிடாரம், பகுதியில் சிப் காட்டிற்கு விளை நிலங்களை அரசு எடுப்பதை நிரந்தரமாக கைவிடும் வரையும், சிப்காட்டை ஓட்டப்பிடாரத்திற்கு வடக்கில் உள்ள வனத் துறைக்கு சொந்தமான இடத்தில் அமைத்திட வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மக்களை திரட்டி தொடர்ந்து போராடும்.
- (3.12.09 தீக்கதிர் கட்டுரை)

வாச்சாத்தி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

தருமபுரி அமர்வு நீதி மன்றத்தில் நடந்துவரும் வாச்சாத்தி வழக்கு டிசம்பர் 23-ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் வாச்சாத்தி கிராமத்தில் 1992 ஆம் ஆண்டு மலைவாழ் மக்களை சார்ந்த 18 பெண்கள் வனத்துறையை சேர்ந்தவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதுதொடர்பாக வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்துறையினர் 269 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கும் மாற்றப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 16 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் கடந்த ஜுன் மாதம் தருமபுரி அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 20,21 அன்று மாவட்ட நீதிபதி எஸ். குமரகுரு தலைமையில் நடைபெற்ற குறுக்கு விசாரணையில், வனத்துறையினரால் பாதிக்கப்பட்ட 18 பெண்களில் முதல் நாள் ஜெயா, சித்திரா, அமுதா, காந்தி, லட்சுமி ஆகிய ஐந்து பேரும் இரண்டாம் நாள் முத்துவேடி, பாப்பாத்தி, மல்லிகா மாரிக்கண்ணு ஆகிய நான்கு பேரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கூறினர்.

நவம்பர் 13 அன்று நடை பெற்ற விசாரணையில் பாதிக்கப்பட்ட 18 பெண்களில் மீதமுள்ள செல்வி, தேன்மொழி, காந்திமதி உள்ளிட்ட ஒன்பது பேரும் தங்களுக்கு நேர்ந்த கொடு மைகளை நீதிபதியிடம் கூறினர். பின்னர் இவ்வழக்கு நவம்பர் 30 அன்று நடைபெறுவதாக இருந்தது. சிறை வார்டன் லதாபாய் சாட்சியமளிக்க வந்திருந்தார். ஆனால், மாவட்ட நீதிபதி எஸ். குமரகுரு விடுப்பு என்பதால், டிசம்பர் 23 ம் தேதிக்கு வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.