சனி, 7 நவம்பர், 2009

ஊழலை மறைக்க சாதியை முன்நிறுத்துவதா?

தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் பேரணியையொட்டி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் அக்டோபர் 27ந் தேதி தமிழக முதலமைச்சரைச் சந்தித்தபோது, இதர பல்வேறு பிரச்சனைகளு டன், காவேரிராஜபுரத்தில் நீதிபதி பி.டி.தினகரன் ஆக்கிரமித்துள்ள நிலம் குறித்தும் அவரது கவனத் திற்குக் கொண்டுவந்தனர்.

விவ சாயிகள் சங்கத்தின் அகில இந் திய பொதுச் செயலாளர் கே.வரத ராசன், இந்தப் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தமிழக அரசிடம் அறிக்கை கேட்டிருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி வந் துள்ளதைக் குறிப்பிட்டு தமிழக அரசு அறிக்கை அனுப்பும்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிக்கைக்கு மாறாக அது அமைந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினார்.

முதல்வர் இந்தக் கோரிக்கைக்கு மாறான எந்தக் கருத்தையும் தெரிவிக்க வில்லை.

திருவள்ளூர் மாவட்ட ஆட் சியர் உச்சநீதிமன்றத்திற்கு அனுப் பியுள்ள அறிக்கை அரசு நிலங் கள் நீதிபதியால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது. தமிழக அரசும் இதையே உறுதி செய்யுமானால் அது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நில ஆக்கிர மிப்பு குறித்து எழுப்பியுள்ள புகார்களின் நம்பகத்தன்மைக்கு வலு சேர்ப்பதாக அமையும்.

அக்டோபர் 31ம் தேதி முர சொலியில், வெளியிடப்பட்டுள்ள படங்களும், அவற்றுக்குக் கீழே பிரசுரிக்கப்பட்டுள்ள பாரதி யாரின் கவிதை வரிகளும், முன் னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை இடித்துரைப்பதோடு மட்டுமின்றி, நீதிபதி தினகரனின் மோசடியை நியாயப்படுத்தும் விதமாகத் தோற்றமளித்துள்ளன. அதுமட்டுமல்லாமல், நிலமோசடி, அரசு நிலம் ஆக்கிரமிப்பு, உச்ச வரம்புக்கு மேல் நிலம்குவிப்பு என்ற மையப்பிரச்சனையை பின்னுக்குத்தள்ளி, சாதிப் பிரச் சனையை முன்நிறுத்துவதற்கு இது இட்டுச் செல்லும்.

நவம்பர் 2ந் தேதி முரசொலி யில், சின்னக்குத்தூசியின் விமர் சனக் கட்டுரையில் எடுத்தாண் டுள்ள உதாரணங்களும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் விதத் தில் உள்ளன. படங்களும், பாரதி யின் பாடல் வரிகளும், சின்னக் குத்தூசியின் குத்தலான விமர்சன மும் முதல்வரின் கவனத்திற்கு வராமல் இருக்க வாய்ப்பில்லை.

முரசொலியில் வந்த படமும் - பாடல் வரிகளும் பல வண்ணங் களில் பெரிய சுவரொட்டிகளாக அச்சிடப்பட்டு திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ‘நன்றி முர சொலி’ எனப்போட்டு ஒட்டப்பட் டுள்ளது. இவை அனைத்தையும் தொகுத்துப்பார்த்தால், தமிழக அரசு நீதிபதி தினகரனின் நில ஆக்கிரமிப்புப் பிரச்சனையில், உண்மைகளின் அடிப்படையில் நியாயமான நிலைபாடு எடுத்துச் செயல்படுமா?, என்ற ஐயப்பாட் டைக் கிளப்புகிறது.

ஜெயலலிதா சட்டவிரோத மாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து பங்களா கட்டியுள்ளார் என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசுதானே? அத்துமீறி கட்டப்பட்ட பங்களாவை இடித் துத் தரைமட்டமாக்குவதை யார் தடுத்தது? அரசின் மவுனத்திற்கு சாதியை இழுப்பது ஏன்?

ஒரு தலித் உச்சநீதிமன்ற நீதிபதி ஆவ தைத் தடுக்கவே இந்தப் பிரச்சனை எழுப்பப்படுகிறது என்ற குற்றச் சாட்டு ஜமுக்காளத்தில் வடிகட் டின பொய்யாகும். தினகரனை விட்டால் உச்சநீதிமன்ற நீதிபதி ஆகும் தகுதி படைத்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதி வேறு யாருமே இல்லையா? அவ் வளவுக்குத் தகுதி குறைவாகவா, ஆள் பற்றாக்குறையாகவா, இன்று தலித் சமூகம் இருக்கிறது.

மற்றவர்களின் குற்றத்தைப் பொதுமைப்படுத்துவதன் மூல மாகத் தான் செய்த குற்றத்தை நியா யப்படுத்த முயற்சிப்பது ஒரு அர சியல் போக்காக ஆகிவிட்டது.

மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு வெளிவந்த போது, பிஜேபி ஆட் சியில் இதைவிட அதிகமாக ஊழல் நடந்ததென்றும், ராசா தலித் என்பதால் பெரிதுபடுத்தப்படு கிறது என்றும் கூறப்படுகிறது. இத்தகைய ஊழல் மோசடிகளை செய்து மாட்டிக்கொண்டால் தப் பித்துக்கொள்வதற்கான தகுதியாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததை மாற்றுவது நியாயமா காது.

ஆள் பார்த்து, சாதி பார்த்து, வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்த்தெல்லாம் அரசியல் நிலைபாடு எடுப்பது கம்யூனிஸ்ட் டுகளுக்கு பழக்கமில்லை.

காவேரிராஜபுரத்தில் வசிக்கும் மக்களில் 470 பேர் மாவட்ட ஆட் சித் தலைவரிடம் நீதிபதி தின கரன் ஆக்கிரமித்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டுத் தங்களுக்கு வழங்க வேண்டு மென்று மனுக் கொடுத்துள்ளனர். 470 பேரில் 450 பேர் தாழ்த்தப் பட்ட மக்களும் - பழங்குடியின மக்களும்தான். பல நூறு தலித் துகள் நிலமில்லாமல் அன்றாடங் காய்ச்சிகளாக அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் போது, ஒரு வசதி படைத்த தலித் ஓராயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்துக் கொள்வது நியாயமா? இதுதான் சமூக நீதியா?

சிறுதாவூரில் தலித் மக்க ளுக்கு அரசு வழங்கிய நிலத்தை மோசடியாக அபகரித்ததையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்து, விசாரணைக் கமிஷன் அமைக்க வைத்ததும் மார்க் சிஸ்ட் கட்சி தானே? மூன்று மாதத் தில் விசாரணை முடித்து அறிக் கை அளிக்கப்படும் என்று அறி வித்து, மூன்று ஆண்டுகளாகியும் கிடப்பிலே போடப்பட்டிருக் கிறதே? கமி ஷன் அறிக்கையைப் பெற அரசு முயற்சி எடுக்க வேண்டாமா?

எனவே, பிரச்சனையைத் திசை திருப்பும் தவறான போக் கைக் கைவிட்டு, நிலத்தை வளைத் திருப்பது தண்டச் சோறுண்ணும் குலமானாலும், வர்க்கமானாலும், சட்டத்தையும் நீதியையும் மைய மாக வைத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே நமது எதிர்பார்ப்பு!

நிலத்தையே நம்பி வாழும் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிலம் கிடைக்க அனைவரும் சேர்ந்து முயற்சிப்போம். நவம்பர் 9ம் தேதி நீதிபதி தினகரன் வளைத்து வைத்துள்ள நிலத்தை மீட்டு நிலமற்றவர்களுக்கு விநி யோகிப்பதற்காக மாபெரும் நில மீட்சி இயக்கம் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக அங்குள்ள தலித் ஏழைகளின் முகத்தில் சிரிப்பைக் கொணர அரசு செயல்படட்டும்.
- பெ. சண்முகம்,
பொதுச்செயலாளர்-
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்,
தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர்-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

செட்டிபுலம் சாதி வெறியர்களின் முன்ஜாமீன் மனுவை ஏற்கக் கூடாது

சென்னை, நவ. 4 -
செட்டிப்புலத்தில் தலித் மக்களுக்கு எதிராகவும், அரசு நிர்வாகத்திற்கு எதிராகவும் வன்முறை வெறியாட்டம் நடத்தியோரை தண்டனையிலிருந்து தப்பவிடக் கூடாது என்றும், அவர்கள் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்கக் கூடாது என்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கூறியது.

இதுதொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 3-ம் தேதி மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.

செட்டிப்புலம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தலித் மக்களை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நுழைய விடாமல், அங்குள்ள சாதி ஆதிக்க வெறியர்கள் தடுத்து வந்தனர். இந்த தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்துவதென தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்தது.

அதன்படி நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.மாரிமுத்து, முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் ஆகியோர் தலைமையில் தலித் மக்கள் கோயில் நுழைவுக்காக சென்ற போது, சாதி ஆதிக்க வெறியர்கள் கோயிலின் கதவை பூட்டிவிட்டுச் சென்று விட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் சாதி வெறியர்கள் போட்ட பூட்டிற்கு சீல் வைத்தனர்.

மேலும், கோயில் நுழைவு தொடர்பாக அக்டோபர் 10-ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். அதில், தலித் மக்கள் கோயிலுக்குள் செல்வதை எதிர்க்க மாட்டோம் என்று சாதி ஆதிக்க வெறியர்கள் ஒப்புக்கொள்ளவே, வி.மாரிமுத்து எம்எல்ஏ தலைமையில் அக்டோபர் 14-ம் தேதி தலித் மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவதென அறிவிக்கப்பட்டது.

குறித்தபடி 14-ம் தேதி தலித் மக்கள் கோயிலுக்குள் செல்ல மாரிமுத்து எம்எல்ஏ தலைமையில் ஊர்வலமாக வந்த போது, பெருங்கூட்டமாக எதிரே வந்த கலகக்காரர்கள், பிரச்சனையில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கோட்டாட்சியரே தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்வதென முடிவுசெய்து, அதன்படி தலித் மக்களை அழைத்துச் சென்றபோது, திடீரென 300-க்கும் மேற்பட்ட சாதி ஆதிக்க வெறியர்கள், அதிகாரிகள், தலித் மக்கள் மற்றும் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இரும்புக் கம்பிகள், உருட்டுக் கட்டைகள், கற்கள் போன்றவற்றால் கடுமையாகத் தாக்கினர். இதில், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். கோட்டாட்சியரின் வாகன ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடும் அளவிற்கு நிலைமை போனது.

இந்த வன்முறை தொடர்பாக பெயர் தெரிந்த 15 பேர் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் மீது, கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் 147, 148, 188, 324, 341, 332, 153(ய)(ஐஐ) மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் பிரிவு 3(ஐ) அத்துடன் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(ஐ)(ஓஐ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே வழக்கில் தொடர்புடையோரில் சந்தோசம், ஜெயபால், பால்ராஜ், முருகானந்தம், மகேந்திரன், ஜெகதீசன், சிவகுமார், கந்தசாமி, செல்வராஜ், நாகராஜ் ஆகிய 10 பேர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 482-ன் கீழ் மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அதைத் தொடர்ந்து நாங்கள் நீதிமன்றத்தில் சரணடையும் அன்றே தங்களின் மனுவை கருணையோடு பரிசீலித்து ஜாமீன் வழங்குவது தொடர்பாக அன்றே தீர்ப்பு வழங்க தஞ்சாவூர் முதன்மை அமர்பு நீதிபதிக்கு (தனி நீதிமன்றம்) உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

அக்டோபர் 26-ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த மனு மீது நவம்பர் 3-ம் தேதி மீண்டும் விசாரணை நடைபெற்றது. நீதிபதி சி.டி.செல்வம் மனுவை விசாரித்தார்.

அப்போது தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், குற்றம் சாட்டப்பட்டுள்ளோரின் மனுக்கள் நிலை நிற்கத்தக்கதல்ல என்றும்; அவை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு விரோதமானது; எனவே அவற்றை ஏற்கக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கில் தனது தரப்பையும் கேட்டு நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று சம்பத் குறிப்பிட்டிருந்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி வாதாடினார்.

அதைத்தொடர்ந்து இவ்வழக்கை நவம்பர் 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக கூறிய நீதிபதி, வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் வி.கோபிநாத், நீதிமன்றத்திற்கு உதவுமாறும் உத்தரவிட்டார்.