திங்கள், 31 மே, 2010

தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதிய நிர்வாகிகள் தேர்வு





புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைவராக பி.சம்பத், பொதுச்செயலாளராக கே.சாமுவேல்ராஜ், பொருளாளராக ஆர்.ஜெயராமன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

அமைப்பின் துணைத்தலைவர்களாக என்.வரதராஜன், இரா.அதியமான், ஏ.லாசர், பெ.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன், கு.ஜக்கையன், ஜி.லதா, ஆர்.சிங்காரவேலு, கோவை ரவிக்குமார், நிக்கோலஸ், ஞானப்பிரகாசம், எஸ்.திருநாவுக்கரசு, ஜி.ஆனந்தன், எம்.சின்னதுரை, நாகை மாலி, உ.நிர்மலா ராணி, சுப்பு ஆகியோரும், செயலாளர்களாக க.சுவாமிநாதன், கே.ஆர்.கணேசன், எஸ்.கண்ணன், பி.சுகந்தி, ஆர். கிருஷ்ணன், பி.இசக்கிமுத்து, யு.கே.சிவஞானம், ஆதவன் தீட்சண்யா, கே.ராமசாமி, பி.இராமமூர்த்தி, ஜி.பெருமாள், கணேஷ், எஸ்.பொன்னுத்தாய், பழனிச்சாமி, தங்கராஜ், எம்.ஜெயசீலன், ராஜ்மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இத்துடன் 98 மாநிலக்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.