திங்கள், 9 நவம்பர், 2009

நிலமோசடி நீதிபதிக்கு ஆதரவாக தமிழக அரசு - திருவள்ளூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு - பெ.சண்முகம் - தலைவர்கள் கைது

திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரம் கிராமத் தில், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தின கரன் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க வலியு றுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ச்சியான போராட் டங்களை நடத்தி வருகின்ற னர். இதுதொடர்பான நீதி விசாரணையை நியாயமாக நடத்த தலையிடுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கும் புகார் அனுப்பப்பட்டுள் ளது. எனினும் தமிழக அர சும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் ஆக்கிரமிக் கப்பட்ட நிலத்தை மீட்கும் நடவடிக்கைகளை மேற் கொள்ளாமல், இதை எதிர்த்து போராடுகிற விவசாயிகளை ஒடுக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், காவேரிராஜபுரம் கிராமத் தில் நீதிபதி தினகரனால் சட்டவிரோதமாக ஆக் கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களை மீட்டு, தலித் மற் றும் நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கும் போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்தது.

2009 நவம்பர் 9 -ம் தேதி, விவசாயிகள் சங்க பொதுச்செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான கி.வரதராசன் தலைமையில் இப்போராட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தப் போராட்டத்தை சீர்குலைக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஞாயிறன்று காலை முதலே அராஜக நடவடிக்கைகளை துவக்கி விட்டன. கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான போலீஸ் பட்டாளத்தை திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் குவித்துள்ளது. மேலும், மாவட்டம் முழு வதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவேரிராஜபுரம் கிராமத்திலும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அக்கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்கள் வீட்டை விட்டு வர முடியாத அளவிற்கு வீட்டுக்குள்ளேயே சிறை வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஞாயிறன்று மாலை 5 மணியளவில் போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அழைப்பின் பேரில் அவரது அலுவலகத்திற்குச் சென்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான பெ.சண்முகம், கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.செல்வராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராசன், மாவட்டத் தலைவர்கள் கே.துளசி நாராயணன், கே.ராஜேந்திரன் ஆகியோரை காவல் துறையினர் அராஜகமாக கைது செய்தனர்.

எனினும், போராட்டத்தை முடக்க அரசு மேற்கொள்ளும் இத்தகைய கைது நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும், அரசு எத்தகைய மிரட்ட லில் ஈடுபட்டாலும், அனைத் தையும் மீறி திங்களன்று காவேரிராஜபுரம் கிராமத்தில் நிலமீட்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்தார்.

மேலும், சட்டவிரோ தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்டு முதலமைச்சரின் இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கிட நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் தமிழக அரசு, சட்டவிரோத நில ஆக்கிரமிப்பை பாதுகாத்திட இத்தனை சுறுசுறுப்புடன் செயல்படுவது ஏன் என்றும் தனது அறிக்கையில் அவர் கேள்வி எழுப்பினார்.

காவேரிராஜபுரத்தில் நிலமீட்பு போராட்டத்தை முடக்க விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களை அராஜகமாக கைது செய்துள்ள காவல்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வன்மையாகக் கண்டித்தது. கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

காவேரிராஜபுரம் கிராமத்தில் நீதிபதி பி.டி.தினகரன் அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு தரிசு நிலங்களை மீட்டு தலித் மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கிட வற்புறுத்தி திங்களன்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், விவசாயிகள் சங்க அகில இந்திய பொதுச் செயலாளருமான கி.வரதராசன் தலைமையில் போராட்டம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விடுத்த அழைப்பின் பேரில் கண்காணிப்பாளரின் அலுவலகத்திற்கு ஞாயிறன்று மாலை 5 மணியளவில் சென்ற பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து, ஏராளமான போலீஸ் படையைக் குவித்து பொதுமக்களையும், காவேரிராஜபுரம் மக்களையும் மிரட்டி வருகின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு என அழைத்து விட்டு, தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது காவல்துறையின் கையாலாகாத்தனத்திற்கு எடுத்துக் காட்டாகும். தமிழக அரசின் இத்தகைய அராஜகமான போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண் டிக்கிறது.

இத்தகைய அராஜகப் போக்கை கைவிட்டு, கைது செய்துள்ள தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், மேலும், 144 தடை உத்தரவையும், குவிக்கப்பட்டுள்ள போலீசையும் திரும்பப் பெற வேண்டுமெனவும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை உறுதி செய்திட வேண்டுமெனவும், நீதிபதியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்டு தலித் மற்றும் நிலமற்றவர்களுக்கு வழங்கிட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வற்புறுத்தி கண்டனக் குரல் எழுப்பிட வேண்டுமென கட்சி அமைப்பு களையும், ஜனநாயக அமைப்புகளையும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் கூறியது.