வியாழன், 5 நவம்பர், 2009

சாதி ஆதிக்க வெறியில் இது ஒரு விநோதம்!

அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியைச் சேர்ந்த அருந்ததியர் சரவணன். இவர் பந்தல் குடி யில் உள்ள கடை ஒன்றில் குடிப்பதற்கு தண் ணீர் பாக்கெட் வாங்கியுள் ளார். அதை குடித்துவிட்டு சாலையில் போட்டுள்ளார்.

அப்போது அந்த வழி யாக வந்த வாகனம் ஒன்று அந்த பாக்கெட் மீது ஏறிய தும் சாலையில் சென்ற ஒருவர் மீது பாக்கெட்டில் இருந்த தண்ணீர் துளிகள் தெறித்துள்ளன.

அவர் அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் ஆவார். தலித் அருந்ததிய இளைஞர் குடித் துப்போட்ட பாக்கெட்டி லிருந்து தன்மீது தண்ணீர் தெறிப்பதா என்று ஆத்திர மடைந்த அவர் சரவண னை அடிக்க முயன்றார். அப்போது அருகில் இருந்த வர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள் ளனர்.

இந்நிலையில் தீபாவளி யன்று மாலை ஆதிக்க சமூ கத்தைச் சேர்ந்த 4 பேர் தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் வந்து சரவணன் உட்பட பலர் மீது தாக்குதல் நடத் தினர்.

எனவே தலித் மக்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையிடம் புகார் மனு தந்துள்ளனர். காவல் துறை வழக்குப்பதிவு செய்ய மறுத்துள்ளது.

பின்பு மார்க் சிஸ்ட் கட் சியின் கடும் நிர்பந்தத்திற்கு பிறகே வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனை கண் டித்து பந்தல்குடியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஆர். சந்திரமோகன் தலைமை யேற்றார். ஆர்.அண்ணா துரை, கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப் பினர் சி.முருகேசன் பேசி னார். மாவட்டக்குழு உறுப் பினர்கள் எம்.தாமஸ், எஸ். பூங்கோதை, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ் கண் டன உரையாற்றினர். எம். செல்லத்துரை உட்பட 200 பேர் கலந்து கொண்டனர்.