புதன், 3 மார்ச், 2010

தொழில் கடன் கேட்டு நெறிக்குறவர்கள் மனு

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் வசிக்கும் நெறிக்குறவர்கள், தாங்கள் தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் கேட்டு, மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர்.

நெறிக்குறவர் சமூகத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளருமான கே.நாகூரான் தலைமையில் நடைபெற்ற இந்த மனு அளிப்பின் போது ஆட்சியர், வங்கி மேலாளர்களைத் தொடர்பு கொண்டு கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் பி. சீனிவாசராவ் நகர், அடஞ்ச விளாகம், இடும்பாவனம், திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 35 நெறிக்குறவ குடும்பத்தினர் மனு அளித்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் வங்கிக் கடன் கிடைக்க வழிவகை காண வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கட்சியின் நகர்ச் செயலாளர் எம்.பி.கே.பாண்டியனும் கோரிக்கை விடுத்துள்ளார். (7.2.10 தீக்கதிர் செய்தி)