வியாழன், 11 பிப்ரவரி, 2010

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் இணைத்திடுக!- திருச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தலித் கிறிஸ்தவர்களைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருச்சி ரயில்வே ஜங்சன் ரவுண்டானா அருகில் திங்களன்று (25.01.2010) காலை எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சிராப்பள்ளி மாவட்டச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர் தலைமை வகித்தார் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் எம்.ஜெயசீலன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், ஆயர் பேரவையின் எஸ்.சி., எஸ்.டி கமிஷன் மாநிலச் செயலாளர் இசட்.தேவ சகாயராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேசுகையில், மத்திய அரசால் அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை வந்தும் கூட அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை; 60 ஆண்டுகளாக தலித் கிறிஸ்தவர்கள் தாழ்த்தப்பட் டோர் பட்டியலில் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றனர்; இவர்களை பிற்படுத்தப்பட்டவர்களும் ஏற்றுக்கொள்வதில்லை; தாழ்த்தப்பட்டவர்களும் ஏற்றுக் கொள்வதில்லை; இந்நிலையில், தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுடன் இணைந்து போராடும் இதற்கு அனைத்துப்பகுதி மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். முடிவில் மாநகரச் செயலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், சி.மாசிலாமணி, எஸ்.சந்திரன், ஆர்.ராஜா, வி.வி.கிருஷ்ணமூர்த்தி, கே.சி.பாண்டியன், கே.சிவராஜ், வி.சிதம்பரம், எஸ்.ரங்கராஜன், ஏ.பழனிச்சாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் எம்.அண்ணாதுரை நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தலித் கிறிஸ்தவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கலந்து கொண்டனர்.