செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

கந்துவட்டிக் கொடுமை : துப்புரவுத் தொழிலாளி மீது கொலை வெறித் தாக்குதல்

அருப்புக்கோட்டை நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் ஆத்திபட்டியை சேர்ந்த பாப்பன்(45). இவருக்கு தெரிந்த மாரியம்மாள் என்பவர், 34-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கலைச்செல்வி யிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாக தெரிகிறது. அந்த பணத்தை மாரியம்மாளிடம் இருந்து மற்றொருவர் வாங்கிவிட்டாராம்.
எனவே, கொடுத்த பணத்திற்கு வட்டி தரவில்லை எனக்கூறி வேலைசெய்து விட்டு மாலையில் வந்த பாப்பனை கவுன்சிலர் செல்வி அடியாட்களுடன் வந்து ஆட்டோவில் கட்டாயப்படுத்தி தூக்கிச் சென்றுள்ளார். பின்பு செல்வி மற்றும் 4 பேர் சேர்ந்து பாப்பனை பல மணிநேரம் கொடூர ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.
பாப்பன் தற்போது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்ட பாப்பனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.சேகர், நகர செயலாளர் எம். தாமஸ், ஒன்றியச் செயலாளர் ஆர்.சந்திரமோகன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.