திங்கள், 18 ஜனவரி, 2010

காணி இன மக்களுக்கு அரசு திட்ட உதவி அமலாகவில்லை

குமரி மாவட்டம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் களியல் பேரூர் சிறப்புக்கூட் டம் பேரூராட்சிக்குழு உறுப்பினர் ராஜினி தலைமையில் நடைபெற்றது. களியல் வட்டாரச் செயலாளர் ராகவன், மாவட்டத் தலைவர் தங்கப்பன், நாகப்பன் நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் மலைவிளைபாசி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

களியல் பேரூர் கிளைத் தலைவராக ராஜினி, துணைத் தலைவராக இருதயதாஸ், செயலாளராக ஒமனா, துணைச் செயலாளராக வேலப்பன் காணி, பொருளாளராக நாகப்பன் நாயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

களியக்காவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட மலையோரப் பகுதி தலைக்குமலை, சிற்றாறு - சிலோன் காலனி, மல்லமுத்தன்கரை கோதயாறு பகுதிகளில் வசிக்கும் காணி இன ஆதிவாசி மக்களுக்கு சமூக நலத்திட்டங்கள் ஒன்றும் இதுவரை அமலாக்கவில்லை; விவசாயத் தொழிலாளர் சமூக பாதுகாப்பு அட்டை களி யல் கிராம அலுவலகம் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டாலும், சலுகைகள் வழங்கப்படவில்லை; ஆகவே, இந்த திட்டங்களை உடனடியாக அமல்படுத்துவதுடன், சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்கு மலைப் பகுதிகளிலிருந்து ஏராளமான ஆதிவாசிகள் உள்ளிட்ட மக்கள் கலந்து கொண்டனர்.