செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

தலித் இளைஞர்கள் மீது பொய் வழக்கு : மதுக்கூரில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியம், மதுரபாஷானபுரம் கிராமத்தில் ஆதிக்க சாதியினரால் தாக்குதலுக்கு உள்ளான தலித் இளைஞர்கள் மீதே பொய் வழக்கு போட்டுள்ள காவல்துறையினரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுக்கூர் பேருந்து நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.காசிநாதன் தலைமை தாங் கினார். தலித் இளைஞர்களை அரிவாளால் வெட்டிய ஆதிக்க சாதியினரை இதுவரை கைது செய்யாததைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பொய் வழக்கு போட்டதைக் கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதியவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, ஒன்றியச் செயலாளர் எஸ்.சாம்பசிவம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.ரகு நாதன், பி.சக்திவேல், ஜி.பெரமையன், எஸ்.தங்கவேல், எம்.கைலாசம், பி.ஜீவா, எம்.முருகேசன், ஏ.எஸ்.அருளானந்து, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் வாசு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.