செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

தீண்டாமைக்கெதிரான உறுதியான போராட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் பெருமிதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட பேரவைக் கூட்டம், நாகை புளு ஸ்டார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமையன்று (9.1.2010) நடைபெற்றது.

மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச்செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், இடைக்குழு உறுப்பினர்கள் பேரவையில் பங்கு பெற்றனர். பேரவைக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ‘இன்றைய அரசியல் நிலைமை’ என்னும் பொருளில் சிறப்புரையாற்றினார்.

அப்போது வேதாரண்யம் ஒன்றியம், வாட்டாக்குடி கிராமத்தில் தலித்துகளுக்காகத் தனி மயானம் வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி சமத்துவ மயானம் பெற்றது; செட்டிப்புலம் சிவன் கோயிலில் தலித் மக்கள் ஆலய நுழைவு செய்தது, வாலிபர் சங்கப் போராட்டத்தால் செம்பனார்கோயில் ஒன்றியம் மாத்தூர் மாரியம்மன் கோயிலில் தலித் மக்கள் ஆலய நுழைவு செய்தது ஆகியவை தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அண்மைக் காலத்தில் பெற்ற வெற்றிகள் என்று ஜி.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இப்பேரவையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நாகை மாலி, பி.வைரன், எம்.நடராஜன், எம்.காத்தமுத்து, டி.கணேசன், கோவை சுப்பிரமணியன், ஜி.கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.