செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

அம்பேத்கர் வேலைவாய்ப்பு மையத்தில் பயிற்சி துவங்கியது

கோவையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. இதில் அரசு வேலை- போட்டித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள், 10.01.2010 அன்று துவங்கியது.

கோவை சரோஜ் நிலையத்தில் (கோவைப் பகுதி ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்க அலுவலகம்) நடைபெற்ற பயிற்சி வகுப்புத் துவக்க விழாவில், பயிற்சி பெற வந்த மாணவர்களை கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம் வாழ்த்திப் பேசினார். மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், தீக்கதிர் நாளிதழ் துணை ஆசிரியருமான க.கணேஷ் நோக்கங்களை விளக்கினார்.

பயிற்சி மையத்தில் முதல் கட்டமாக ஏப்ரல்-11ல் நடைபெற உள்ள தமிழக அரசுப் பணி தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்

வுக்காக பயிற்சி அளிக்கப்படுகிறது. வரலாறு, கணிதம், அறிவியல், தமிழ் மற்றும் பொது அறிவுக்கான அனைத்து பாடங்

களுக்கும் தனித்தனி வகுப்புகள் நடைபெற உள்ளன. முதல் நாள் துவக்க பயிற்சி வகுப்பிலேயே தலித் மற்

றும் அருந்ததியப் பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

பயிற்சி வகுப்பு துவக்கத்தில் அகில இந்திய ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் கோவைப் பகுதி செயலாளர் வி.சுரேஷ், தலைவர் எம்.கஜேந்திரன், பொருளாளர் மணிகண்டன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.

நெல்சன் பாபு, மாவட்டக் குழு உறுப்பினர் என்.ஜாகீர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாக வழக்கறிஞர் வெண்மணி உள்ளிட்டோர் பங்கேற்று தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.