வியாழன், 4 மார்ச், 2010

பிப். 10- பெரியார் நகருக்கு என்.வரதராஜன் வருகை

 கோவையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சியால் அகற்றப்பட்ட தீண்டாமைச்சுவர் இருந்த பகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் பிப்ரவரி 10-ம் தேதி நேரில் பார்வையிடுகிறார்.

அவருடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் யு.கே.வெள்ளிங்கிரி, கே.சி.கருணாகரன், கே.மனோகரன். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் ரவிக்குமார் ஆகியோரும் செல்கின்றனர்.