வியாழன், 4 மார்ச், 2010

தீண்டாமையால் பாழடைந்த திருப்பூர் தொழிற்பேட்டை !

திருப்பூர் முதலிபாளையம் அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தாட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இதில் 99 தொழிற்கூடங்கள் இயங்கிவருகின்றன. முழுக்க ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் தொழில் முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்ட இந்த தொழிற்பேட்டை தற்போது பாழடைந்த நிலையில் உள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் தொழிற்கூடத்தை கைவிட்டுவிட்டனர். தொழிற்கூடங்களை இயக்கி வரும் சிலரும் குறைந்த வேலைவாய்ப்பு சூழலில் தத்தளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி தொழில் முனைவோர் கூறுகையில் , “இங்கு தொழில் நடத்தும் இளைஞர்கள் பலர் திறமையானவர்களே, இருந்தாலும் வேலை செய்ய போதுமான  ஆர்டர்கள் (வாய்ப்புகள்) கிடைக்கவில்லை. வாய்ப்பு வழங்கக் கூடிய பெரும் தொழில்கள் எல்லாம் ஆதிக்க சாதியினர் வசமே இருக்கின்றன. இதனால் தலித் இளைஞர்கள் ஒருவகை “தொழில் தீண்டா மைக்கு” ஆளாகின்றனர். இதனால் திறமையிருந்தும் சாதியின் காரணமாக தலித் இளைஞர்கள் இழப்பை சந்திக்கின்றனர்” என்று குறிப்பிட்டனர்.