வியாழன், 4 மார்ச், 2010

விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

நரிக்குடி ஒன்றியம், உளுத்திமடை கிராமத்தில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்திய தலித் மக்களைத் தாக்கிய ஆதிக்கசாதியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நரிக்குடியில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் தேவி தலைமை வகித்தார். கலைவேந்தன் துவக்கவுரை ஆற்றினார். போராட்டத்தை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன் பேசினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.முருகன், எஸ்.ஞானகுரு, ஒன்றியச் செயலாளர் ஏ.பி.கண்ணன், பூமிநாதன், அன்புச்செல்வன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.