வியாழன், 4 மார்ச், 2010

வாச்சாத்தி வழக்கு பிப்.26-க்கு ஒத்திவைப்பு

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வாச்சாத்தி கிராமத்தில் 1992-ம் ஆண்டு மலைவாழ் மக்களைச் சேர்ந்த 18 பெண்களை வனத்துறையினர் பாலியல் கொடுமைப்படுத் தினர். இதுதொடர்பாக வனம், காவல், வருவாய் ஆகிய துறைகளைச் சேர்ந்த 269 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 16 ஆண்டுகாலமாக கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. பிறகு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் தருமபுரி அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப் பட்டது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 18 பெண்கள் குறுக்கு விசாரணையில் சாட்சியமளித்தனர். அதன் பின்பு சிறைக்காவலர் லலிதாபாய் சாட்சியம் அளித்தார்.
மாவட்ட அமர்வு நீதி மன்றத்தின் நீதிபதி எஸ்.குமரகுரு தலைமையில் வியாழக்கிழமை(11.2.2010) அன்று மீண்டும் வழக்கின் விசாரணை நடந்தது. சிபிஐ சார்பில் ஏடிஎஸ்பி(ஓய்வு) சாட்சியம் அளித்தார். வனத்துறையினருக்காக வழக்கறிஞர்கள் ஆர்.வெங்கடேசன், விஜயராகவன், அன்பு ஆகியோர் வாதாடினர்.
பிறகு இந்த வழக்கின் அடுத்த விசாரணையை இம்மாதம் 26ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.